» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சனி 10, மே 2025 8:32:52 AM (IST)



பசுவந்தனை கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 1-ந்தேதி காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் கட்டளைதாரர் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடக்கிறது. 9-வது திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடந்தது.

காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். காலை 10.25 மணிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பசுவந்தனையை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிராம மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் ஊரின் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து பகல் 11.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

10-வது நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) தீர்த்தவாரியும், 11-வது நாள் விழாவான நாளை(ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாளுக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory