» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலத்தில் பைக் மோதி விபத்து: வாலிபர் பரிதாப சாவு!

சனி 10, மே 2025 8:30:51 AM (IST)

எட்டயபுரம் அருகே ஓடை பாலத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள பிதப்புரம் கிராமத்தை சேர்ந்த ஞானதுரை மகன் அஜய் (18). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் பைக்கில் வீட்டிலிருந்து எட்டயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பாேது எதிர்பாராத விதமாக பிதப்புரம் அருகில் உள்ள ஓடைப்பாலத்தில் பைக் மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory