» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண் மீட்பு!

வெள்ளி 9, மே 2025 10:34:55 AM (IST)



திருச்செந்தூா் கோவில் கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் சென்னை கேகே நகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (45) மற்றும் குடும்பத்தினர்கள் கடலில் நீராடிய பொழுது ஜெயலஷ்மிக்கு வலது காலில் அடிபட்டு வலியால் துடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மிவானி, சதீஷ், தலைமை காவலர் மாரியப்பன் ஆகியோர் அந்தப் பெண்ணை கடற்கரையில் இருந்து மீட்டனர்.

பின்பு உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். திருக்கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை முதலுதவி மையம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory