» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி: மேலும் 4 பேர் கைது

வெள்ளி 9, மே 2025 8:15:14 AM (IST)

தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரிடம், செல்போன் டவர் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி, ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950 பணத்தை மோசடி செய்தது தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் சென்னையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் தர்மபுரி தோழனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (27), விழுப்புரம் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஆனந்த் (27), சேலம் பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிராம் மகன் சந்தோஷ்ராஜ் (22), கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் அப்பாஸ் (25) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory