» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: பச்சை சாத்தி சுவாமி, அம்பாள் ரதவீதி உலா!

வியாழன் 8, மே 2025 3:31:36 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளான இன்று பச்சை சாத்தி பித்தளை சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரதவீதி உலா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா மே 1ஆம் தேதி காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் 8ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு தெப்பக்குளம் அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகர் திருக்கோயில் மண்டபத்திலிருந்து நடராஜப்பெருமானுக்கு பச்சை சாத்தி பித்தளை சப்பரத்தில் ரதவீதி உலா நடந்தது. 

பகல் 1.35 மணிக்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் கோயிலில் நடன சேவையுடன் சேர்க்கை பெற்று, பிற்பகல் 2.00 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்லக்கில் ரதவீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து காெண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7.00 மணிக்கு அருள்மிகு கங்காளநாதர் ரதவீதி உலா, 8.00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் ரத வீதி உலா நடக்கதிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory