» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!

வியாழன் 8, மே 2025 8:52:21 AM (IST)

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி - மீளவிட்டான் ரயில் நிலையம் இடையே நேற்று மாலை மைசூர்  எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு சம்பவம் 

கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த மிக்கேல் மகன் மரியதாஸ்  (60). ஓட்டலில் டீ மாஸ்டர் வேலை செய்து வருகிறார். நேற்று மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த அவர் வேலாயுதபுரம் அருகில் பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory