» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ. 1.06 லட்சம் பறிமுதல்!

வியாழன் 8, மே 2025 8:39:27 AM (IST)

தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பிரிவில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கான நிதி அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரையில் நிதி அனுமதிக்கப்படும்.

இங்கு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்சம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு- கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இப்பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர் அன்னலட்சுமி, ஆய்வுக் குழு அலுவலர் வானமாமலை உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர், இந்த அலுவலகத்தின் பொறியாளர் பிரிவில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாலைவரை நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory