» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ. 1.06 லட்சம் பறிமுதல்!
வியாழன் 8, மே 2025 8:39:27 AM (IST)
தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பிரிவில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கான நிதி அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரையில் நிதி அனுமதிக்கப்படும்.
இங்கு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்சம் பெறப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு- கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இப்பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர் அன்னலட்சுமி, ஆய்வுக் குழு அலுவலர் வானமாமலை உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர், இந்த அலுவலகத்தின் பொறியாளர் பிரிவில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாலைவரை நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










