» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தபால்களை தீவைத்து எரித்த அஞ்சலக ஊழியர் கைது

வியாழன் 8, மே 2025 8:37:26 AM (IST)

கழுகுமலையில் தபால்களை குப்பையில் வீசி தீவைத்து எரித்ததாக தற்காலிக அஞ்சலக பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தபால்கள் குப்பையில் வீசி தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதை அறிந்த கழுகுமலை துணை அஞ்சல் அதிகாரி பால்ராஜப்பா இம்மாதம் 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

தொடர்ந்து துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில், அஞ்சலகத்தில் தற்காலிக அஞ்சலக பணியாளராக பணியாற்றி வரும் முத்தையன் சேர்வை தெருவை சேர்ந்த மா. பாலசுப்பிரமணியன், தபால்களை குப்பை கிடங்கில் வீசியதும், தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து துணை அஞ்சலக அதிகாரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory