» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் : அர்ச்சகர்கள் வலியுறுத்தல்!
செவ்வாய் 6, மே 2025 5:55:57 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை ஜூலை 7ம்தேதி மதியம் 12.05 மணிக்கு மேல் நடத்தவேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக விதாயகர்தர் சிவசாமி சாஸ்திரிகள், ஸ்தஸ்தாப் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி, சைங்கரிய சபை தலைவர் ஆனந்தய ஐயர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து விட்டு வருகின்றன. வருகிற ஜூலை மாதம் ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் தொடர்பாக கடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜூலை மாதம் ஏழாம் தேதி காலை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த உகந்த நேரம் என விதாயகர்தர் சிவசாமி சாஸ்திரிகள் குறித்துக் கொடுத்தார்.
ஆனால் தற்போது புதிய பஞ்சாங்கத்தின் படி கும்பாபிஷேகத்தை ஜூலை 7ஆம் தேதி மதியம் 12.05 மணிக்கு மேல் 12.47 மணிக்குள் நடத்த முடிக்க வேண்டும் என சிவசாமி சாஸ்திரிகள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நேரத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லதாக இருக்கும் என அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










