» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் கணினி துறை தேசிய கருத்தரங்கு!
செவ்வாய் 6, மே 2025 3:29:01 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய ஒருநாள் கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக கல்லூரி கணினி துறை பாடகர் குழுவினர் பிரார்த்தனை பாடல் பாடினர். பேராசிரியை பிரின்ஸ்சஸ் பாலா வேதபாடம் வாசித்தார். பேராசிரியை ரெஜினா எலிசபெத் ஆரம்ப ஜெபம் செய்தார். தொடர்ந்து கணினி துறைத் தலைவர் முனைவர் ஜி. ஜெமில்டா அனைவரையும் வரவேற்றார்.
தேசிய கருத்தரங்கி ற்கு கல்லூரி முதல்வர் எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். பேராசிரியை கே. எமிலி எஸ்தர்ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். இக்கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரியான தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியை முனைவர் எஸ். சுமதி கலந்து கொண்டு "நுண்ணறிவு கணினி மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் பேசினார். அதைத் தொடர்ந்து பேராசிரியை பிரேமா கருத்தரங்கின் அறிக்கையை வாசித்தார்.
பேராசிரியை ஷீலா நிறைவு ஜெபம் செய்தார். நிறைவாக பேராசிரியர் எட்வின் டாஸ் நன்றியுரை ஆற்றினார்.இக் கருத்தரங்கில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி கணினி துறை பேராசிரியர்கள் சத்தியராஜ், பமீலா ரேச்சல், சுகன்யா, சாரோன் ஜெனிஸ் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










