» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்ட 4பேர் கைது : ஆயுதங்கள் பறிமுதல்!

ஞாயிறு 27, ஏப்ரல் 2025 1:31:09 PM (IST)

தூத்துக்குடியில், பயங்கர ஆயுதங்களுடன் ரகளை செய்த 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வாள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கலிங்கம் தலைமையிலான போலீசார் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் இசக்கி ராஜா (33), கலைஞர் நகர் முனியசாமி மகன் சிவலிங்கம் என்ற சிவா (22), மட்டக்கடை ஜெகன் மகன் அல்டிரின் (20), சமர் வியாஸ் நகரை சேர்ந்த ஆல்பர்ட் ஜான் டேனியல் மகன் அந்தோணி ராஜ் (24) என்பது தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 2 அரிவாள், 2 வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory