» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து இந்து மகா சபா கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:47:24 PM (IST)



காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாசரேத்தில் இந்து மகா சபா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தெற்கு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாசரேத்தில் இந்து மகா சபா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சுந்தர் வேல் தலைமை வகித்தார். 

மாநில செயலாளர். சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம்குமார்வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிவசேனா மாநில அமைப்பாளர் சசிகுமார் தூத்துக்குடி இந்து வியாபாரிகள் சங்கம்செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டனர். 

மாநில வர்த்தக பிரிவு தலைவர், சக்திகுமார், மாநில இளைஞரணி செயலாளர் ராஜகோபால், சிவசேனா மாவட்டச் செயலாளர் சக்திவேல் மாவட்டத் துணைத் தலைவர்மாரிமுத்து, பவன் மாவட்டச் செயலாளர், வாகன ஓட்டுநர் பிரிவு மாவட்டசெயலாளர் புதியராஜ், ஆறுமுகநேரி நகர தலைவர்சேகர், நாசரேத் நகர தலைவர்செந்தில்வேல், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஆழ்வை ஒன்றிய தலைவர் பாலையா, ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத் தலைவர் அண்ணாசாமி நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory