» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கான்வென்ட் சாலையைச் சேர்ந்தவர் நசரேன் மகன் ஜாக்சன் (65). இவர் குடும்பத்தினருடன் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு நள்ளிரவு சென்றுவிட்டு, நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்கம் கதவை உடைக்கப்பட்டு கிடந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 14½ பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஜாக்சன்அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory