» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50ஆயிரம் திருட்டு: தூத்துக்குடியில் மீண்டும் கைவரிசை

வெள்ளி 18, ஏப்ரல் 2025 10:32:23 AM (IST)

தூத்துக்குடியில் பூ மார்க்கெட் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.50ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் மகன் திருப்பதி ராஜா (33), இவர் தூத்துக்குடி காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே பூ மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை நடத்தி ரவுகிறார். நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை 4.30 மணிக்கு கடையை திறக்க வந்துள்ளார். 

அப்போது கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.50ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதுபோல் கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகில் உள்ள வஉசி மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடையில் ரூ.4ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனால் இரண்டு கடையிலும் திருடியது ஒரே கும்பல்கள் என்று முதற்கட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய மார்க்கெட் பகுதியில் நடந்த சம்பவம் கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory