» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு கூடுதல் வழக்கறிர்களாக இசக்கிலட்சுமி, மற்றும் என்.சுரேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் மதாப் சரன் புருஷ்டி தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வழக்கறிஞரையும், மாவட்ட மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்களையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் இ. இசக்கி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் இசக்கி லட்சுமி மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளராகவும், இவரது கணவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










