» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு கூடுதல் வழக்கறிர்களாக இசக்கிலட்சுமி, மற்றும் என்.சுரேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் மதாப் சரன் புருஷ்டி தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வழக்கறிஞரையும், மாவட்ட மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்களையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் இ. இசக்கி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் இசக்கி லட்சுமி மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளராகவும், இவரது கணவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory