» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அலுவலராக பானுபிரியா பதவி ஏற்றுக் கொண்டார்.

பானுபிரியா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொறியியல் கல்லூரியில் பி.இ. இளநிலை பட்டப்படிப்பும், நெல்லை மருதகுளம் பொறியியல் கல்லூரியில் எம்.இ. முதுநிலை பட்டப்படிப்பும் படித்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்பு துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தென்காசியில் பணிபுரிந்த நிலையில் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் சமீபத்தில் நடந்த குற்றாலம் வெள்ளப்பெருக்கின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பணியில் களத்தில் இறங்கி உள்ளார். மேலும் இவர் நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் தீயணைப்பு மாவட்ட அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)

SRINIVASANMar 19, 2025 - 11:15:55 AM | Posted IP 104.2*****