» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஸ்பிக் - கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா
சனி 15, மார்ச் 2025 10:13:39 AM (IST)

தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினை வஉசி துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் கேப்டன் கிங்ஸ்டன் நீல் துரை, தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார கொடியேற்றி துவக்கிவைத்தார். மேலும் அவர் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பொருட்காட்சியையும் அவர் துவக்கிவைத்தார். அவரது தலைமையில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிறைவு விழாவிற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், இணை இயக்குனர், தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் பாலு, க்ரீன்ஸ்டர் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் செந்தில் நாயகம், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










