» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை திட்டியதால் விஷம் குடித்த வாலிபர் பலி : பசுவந்தனை அருகே பரிதாபம்

சனி 15, பிப்ரவரி 2025 11:10:07 AM (IST)

பசுவந்தனை அருகே தந்தை திட்டியதால் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை நடுத் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் பிரபாகரன் (22). சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 12 ம் தேதி  பிரபாகரனை  அவரது அப்பா முத்துசாமி, காட்டில் காயப் போட்டுள்ள மக்காச்சோளத்தை அள்ளி வீட்டிற்கு கொண்டு வருமாறு  கூறியுள்ளார். 

அதற்கு பிரபாகரன் மறுத்துள்ளார். இதனால் முத்துசாமி கோபத்தில்  பிரபாகரனை  சத்தம் போட்டு உள்ளார்.  இதையடுத்து தந்தையுடன் சண்டை போட்டு கோபத்தில்  வீட்டிலிருந்து கிளம்பி குதிரைகுளம் கிராமத்தின் அருகில் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்பு  அவர் மேல் சிகிச்சைக்காக  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory