» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை திட்டியதால் விஷம் குடித்த வாலிபர் பலி : பசுவந்தனை அருகே பரிதாபம்
சனி 15, பிப்ரவரி 2025 11:10:07 AM (IST)
பசுவந்தனை அருகே தந்தை திட்டியதால் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை நடுத் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் பிரபாகரன் (22). சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 12 ம் தேதி பிரபாகரனை அவரது அப்பா முத்துசாமி, காட்டில் காயப் போட்டுள்ள மக்காச்சோளத்தை அள்ளி வீட்டிற்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அதற்கு பிரபாகரன் மறுத்துள்ளார். இதனால் முத்துசாமி கோபத்தில் பிரபாகரனை சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து தந்தையுடன் சண்டை போட்டு கோபத்தில் வீட்டிலிருந்து கிளம்பி குதிரைகுளம் கிராமத்தின் அருகில் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










