» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:42:09 PM (IST)



கோவில்பட்டியில் மில் தொழிலாளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா  நடந்தது. 

கோவில்பட்டி லாயல் டெக்ஸ்டைல் மில்லில் தொழிலாளியாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் (58)என்பவர் 37 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி சந்தானகிருஷ்ணனுக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சிக்குழு தலைவர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி சந்தானகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சி குழு நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள், லாயல் ஆலை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory