» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டோல்கேட்டில் லாரி கவிழ்ந்து விபத்து : கிளீனர் படுகாயம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:56:15 PM (IST)



தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் டோல்கேட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு நிலக்கரி ஏற்றிக் கொண்டு கோஸ்டல் எனர்ஜன் மின் உற்பத்தி நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை மகேஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். டோல்கேட் அருகே உள்ள நான்கு வழிச்சாலை பாலத்தில் வந்தபோது லாரியில் பிரேக் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து டிரைவர் மகேஸ் லாரியில் இருந்து குதித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி டோல்கேட் தடுப்புச் சுவரில் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்வித்தில் காயம் அடைந்த லாரி கிளீனர் மாரிமுத்து என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்து காரணமாக டோல்கேட்டில் ஒரு வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இன்று காலை லாரி மீட்கப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது. அதிர்ஷ்டவமாக பெரிய அளவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory