» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அறிவிப்பு: இந்து மக்கள் கட்சியினர் கைது!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:40:06 PM (IST)



தூத்துக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.  

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்திற்கு வரும் காதல் ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சிவன் கோவில் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் 

இந்நிலையில் கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சுந்தர், மாவட்ட தலைவர் வீர முருகன் உள்ளிட்ட 4 பேரை மத்திய பாகம் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமாரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory