» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அறிவிப்பு: இந்து மக்கள் கட்சியினர் கைது!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:40:06 PM (IST)

தூத்துக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்திற்கு வரும் காதல் ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சிவன் கோவில் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்
இந்நிலையில் கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சுந்தர், மாவட்ட தலைவர் வீர முருகன் உள்ளிட்ட 4 பேரை மத்திய பாகம் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமாரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










