» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உணவில் பல்லி: 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:55:13 AM (IST)

மணப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தில் புனித வளன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியில் 8 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மாணவர்களுக்கு தோசையும், தக்காளி சட்னியும் வழங்கப்பட்டது. 

இந்த தக்காளி சட்னியில் பல்லி கிடந்துள்ளதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory