» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம்!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:39:31 AM (IST)

தூத்துக்குடியில் நகைக்கடை பெண் ஊழியர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அருணா தேவி வயது (21), பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். 
இவர் கடந்த 12ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் கடையிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory