» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:33:40 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக 1.6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 
 
தூத்துக்குடியில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று செல்விஜர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் விற்பனைக்காக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கல்லத்தி கிணறு கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த சாலமோன்ராஜ் மகன் ஜெயசூர்யா (29), முத்தையாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன்ராஜ் மகன் பிரகாஷ் தினகரன் (24) எனத் தெரியவந்தது. அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory