» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 7:58:49 AM (IST)
கயத்தாறு அருகே திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆசூா் சவாலாப்பேரி கிராமத்திற்கு உள்பட்ட பகுதியில் கோழிக்கடை அருகே சுமாா் 65 வயது மதிக்கத்தக்க பெண் அடையாளம் தெரியாத வாகன மோதி இறந்து கிடப்பதாக, ஆசூா் சவாலாப்பேரி கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பணம் பறிமுதல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:09:37 PM (IST)





