» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
யார் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்: விஜய் அரசியல் குறித்து பவன் கல்யாண் பேட்டி
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:50:00 PM (IST)

"நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கிய போதே வரவேற்று உள்ளேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய யார் வந்தாலும் வரவேற்கிறேன்" என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இன்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் காவி உடையில் தனி விமானம் முலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இது சனாதனா யாத்திரை கிடையாது. நான்கரை ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்று அதனை நிறைவேற்றியுள்ளேன். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டுக்கும், நம்ம நாட்டிற்கும் நல்லது நடக்கட்டும். யார் வந்தாலும் நல்லது நடக்கட்டும் வரவேற்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










