» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
யார் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்: விஜய் அரசியல் குறித்து பவன் கல்யாண் பேட்டி
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:50:00 PM (IST)

"நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கிய போதே வரவேற்று உள்ளேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய யார் வந்தாலும் வரவேற்கிறேன்" என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இன்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் காவி உடையில் தனி விமானம் முலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இது சனாதனா யாத்திரை கிடையாது. நான்கரை ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்று அதனை நிறைவேற்றியுள்ளேன். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டுக்கும், நம்ம நாட்டிற்கும் நல்லது நடக்கட்டும். யார் வந்தாலும் நல்லது நடக்கட்டும் வரவேற்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
