» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
யார் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்: விஜய் அரசியல் குறித்து பவன் கல்யாண் பேட்டி
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:50:00 PM (IST)

"நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கிய போதே வரவேற்று உள்ளேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய யார் வந்தாலும் வரவேற்கிறேன்" என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இன்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் காவி உடையில் தனி விமானம் முலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இது சனாதனா யாத்திரை கிடையாது. நான்கரை ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்று அதனை நிறைவேற்றியுள்ளேன். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டுக்கும், நம்ம நாட்டிற்கும் நல்லது நடக்கட்டும். யார் வந்தாலும் நல்லது நடக்கட்டும் வரவேற்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









