» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்ப் பேரரசு கட்சியினர் கைது: வ.கௌதமன் கடும் கண்டனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 4:55:17 PM (IST)
கோவில்பட்டியில் உரிமை மீட்க போராடிய தமிழ்ப் பேரரசு கட்சியினரை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டத்தை மீறி திறந்த தனியார் சந்தையை எதிர்த்து போராடிய தமிழ்ப் பேரரசு கட்சியை சேர்ந்த செ.சரவணன், மாநில வழக்கறிஞரணி செயலாளர்,கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர், கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர், குமார், மாவட்ட பொருளாளர், லட்சுமணபாண்டியன், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் பாலமுருகன், கழுகுமலை இளைஞரணி செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூக்காண்டி, குருநாதன், ரமேஷ் மற்றும் சமூக ஆர்வலர்களை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மாறாக சட்டத்தை மதிக்காமல் அதனை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நேர்மையற்றவர்களோடு இணைந்து அந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களுக்கும் அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக எத்தகைய அத்துமீறலுக்கும் துணிவோம் என்கிற இவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்த தமிழ்ப் பேரரசு கட்சியினர் அனைவரையும் அரசு உடனே விடுவிக்க வேண்டும்.ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










