» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தைமாத பவுர்ணமி 108 திருவிளக்கு பூஜை

வியாழன் 13, பிப்ரவரி 2025 4:32:33 PM (IST)



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தை மாத பவுர்ணமியொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் தசரா விழா  சிறப்பு வாய்ந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

மேலும் இந்த கோவிலில் விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.  இந்நிலையில் தை மாத பவுர்ணமியொட்டி நேற்று மாலை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், வெங்கடேஸ்வரி ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory