» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தைமாத பவுர்ணமி 108 திருவிளக்கு பூஜை
வியாழன் 13, பிப்ரவரி 2025 4:32:33 PM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தை மாத பவுர்ணமியொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் தசரா விழா சிறப்பு வாய்ந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் இந்த கோவிலில் விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்நிலையில் தை மாத பவுர்ணமியொட்டி நேற்று மாலை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், வெங்கடேஸ்வரி ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










