» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தனியார் சந்தை கால்கோள் விழா: சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

வியாழன் 13, பிப்ரவரி 2025 3:45:57 PM (IST)



கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டக்குளத்தில் தனியார் தினசரி சந்தைக்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர். 

இந்த சந்தை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும், முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி பல்வேறு அமைப்பினர் இன்று காலை கருப்புக் கொடி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். மேலும் தெற்கு திட்டக்குளத்தில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.  விழா அழைப்பிதழில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் அவர்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory