» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலர் தினம்: தூத்துக்குடியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு - விற்பனை அதிகரிப்பு!

வியாழன் 13, பிப்ரவரி 2025 3:07:50 PM (IST)



காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் விலையும் உயர்ந்துள்ளது. 

ஆண்டு தோறும்  பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. ஒரு ரோஜா விலை ரூ.30 எனவும், 20 பூக்கள் கொண்ட கட்டு விலை ரூ.500க்கும் விற்பனையாகிறது.

இது குறித்து பூ மார்க்கெட்டில் சாய்பாபா மலரகம் உரிமையாளர் ஏஎம் கண்ணன் கூறியதாவது "காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் ஓசூர் மற்றும் பெங்களூரில் இருந்து குறைந்த அளவே வந்துள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததாலும் பனிப்பொழிவு காரணமானாலும் பூக்கள் உற்பத்தி தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு ரூ.20 க்கு விற்பனை செய்த பூக்கள் இந்த ஆண்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் பொதுமக்களிடையே அதிக அளவு ஆர்வமுள்ளதால் பூக்கள் விற்பனை அமோகமாக உள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory