» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதலர் தினம்: தூத்துக்குடியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு - விற்பனை அதிகரிப்பு!
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:07:50 PM (IST)

காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் விலையும் உயர்ந்துள்ளது.
ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. ஒரு ரோஜா விலை ரூ.30 எனவும், 20 பூக்கள் கொண்ட கட்டு விலை ரூ.500க்கும் விற்பனையாகிறது.
இது குறித்து பூ மார்க்கெட்டில் சாய்பாபா மலரகம் உரிமையாளர் ஏஎம் கண்ணன் கூறியதாவது "காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் ஓசூர் மற்றும் பெங்களூரில் இருந்து குறைந்த அளவே வந்துள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததாலும் பனிப்பொழிவு காரணமானாலும் பூக்கள் உற்பத்தி தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு ரூ.20 க்கு விற்பனை செய்த பூக்கள் இந்த ஆண்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் பொதுமக்களிடையே அதிக அளவு ஆர்வமுள்ளதால் பூக்கள் விற்பனை அமோகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










