» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிப்.21ல் தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் : அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:09:40 AM (IST)
தூத்துக்குடியில் வருகிற 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தி.மு.க வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தாெடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி, கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










