» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிப்.21ல் தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் : அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!

வியாழன் 13, பிப்ரவரி 2025 11:09:40 AM (IST)

தூத்துக்குடியில் வருகிற 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தி.மு.க வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தாெடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி, கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors


CSC Computer Education





Thoothukudi Business Directory