» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்: கோவில்பட்டியில் 23 பேர் கைது!

வியாழன் 13, பிப்ரவரி 2025 10:53:48 AM (IST)



கோவில்பட்டியில் சபாநாயகர், அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்ற 23பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து ஐந்தாம் தூன் நிறுவனத் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் தமிழ் பேரரசு கட்சியினர், 5வது தூண் அமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பிருந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். 

ஊர்வலம் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் 23 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தெற்கு திட்டங்குளத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory