» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல்!

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:37:02 AM (IST)



திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்களை கியூ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு அந்த வழியாக வந்த டெம்போ வாகனததை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை புளி, சுமார் ஒரு லட்சம் மான்செஸ்டர் சிகரெட்கள், மற்றும் 295 சன் டைரக்ட், மற்றும் 100 டிஷ் டிவி செட்டாப் பாக்ஸ் இருந்தது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory