» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகனங்களில் கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் : வாலிபர் கைது!

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:13:48 AM (IST)

காயல்பட்டினத்தில் 1¾ டன் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வாலிபரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லோடு ஆட்டோ, ஆம்னி கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு காவலா் ஸ்டீபன் அங்கு சென்றபோது, லோடு ஆட்டோ மற்றும் ஆம்னி காா் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இதை பாா்த்த தனிப்பரிவு காவலா் இரு வாகனத்தையும் மடக்கி பிடித்து சோதனையிட்டாா். 

இரு வாகனத்திலும் 50 கிலோ வீதம் 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் 35 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்த பயன்படுத்திய இருவாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது தாெடர்பாக காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி பாண்டி மகன் வேம்படி முத்து (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory