» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் பிப்.15ல் புதிய சந்தை திறப்பு விழா : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
புதன் 12, பிப்ரவரி 2025 5:26:27 PM (IST)
கோவில்பட்டியில் ரூ.6.87கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை வருகிற 15ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையானது மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்ததால், அதை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின்படி கலைஞர் மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொது நிதி ரூ.6.87கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் துவக்கப்பட்டன. தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தையானது சுமார் 157 கடைகளைக் கொண்டிருக்கிறது.
புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி. கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











Ramaraj. KFeb 14, 2025 - 08:13:09 PM | Posted IP 162.1*****