» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாநில ஓவிய போட்டியில் 3வது இடம்: திருச்செந்தூர் பள்ளி மாணவனுக்கு பாராட்டு
புதன் 12, பிப்ரவரி 2025 3:07:28 PM (IST)

ஓவிய போட்டியில் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்த திருச்செந்தூர் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள திரு ராமையா பாகவதர் நினைவு நிலை ஸ்ரீசெந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவன் ச.ஜெய்ரோ, ஓவிய போட்டியில் மாநில அளவில் 3ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து மாணவன் ஜெய்ரோவிற்கு பள்ளி நிர்வாக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் மற்றும் வஉசி நற்பணி மன்றம் சார்பில், மாணவன் ஜெய்ரோவுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வாசிப்பு இயக்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வஉசி நற்பணி மன்ற நிறுவனர் இசக்கிமுத்து, வாசிப்பு இயக்க செயலாளரும், நல்நூலகருமான மாதவன், பொருளாளர் ஜெகநாத பெருமாள், ஆலோசகர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சுபா வரவேற்று பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










