» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநில ஓவிய போட்டியில் 3வது இடம்: திருச்செந்தூர் பள்ளி மாணவனுக்கு பாராட்டு

புதன் 12, பிப்ரவரி 2025 3:07:28 PM (IST)



ஓவிய போட்டியில் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்த திருச்செந்தூர் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

திருச்செந்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள திரு ராமையா பாகவதர் நினைவு நிலை ஸ்ரீசெந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவன் ச.ஜெய்ரோ, ஓவிய போட்டியில் மாநில அளவில் 3ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்து மாணவன் ஜெய்ரோவிற்கு பள்ளி நிர்வாக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் மற்றும் வஉசி நற்பணி மன்றம் சார்பில், மாணவன் ஜெய்ரோவுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு வாசிப்பு இயக்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வஉசி நற்பணி மன்ற நிறுவனர் இசக்கிமுத்து, வாசிப்பு இயக்க செயலாளரும், நல்நூலகருமான மாதவன், பொருளாளர் ஜெகநாத பெருமாள், ஆலோசகர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சுபா வரவேற்று பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory