» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புற்று மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை
புதன் 12, பிப்ரவரி 2025 10:50:10 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் 23ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 8 மணிக்கு சர்ப்ப ஹோமம், 10 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாரணை நடந்தது. 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கோவில் செயல் அலுவலர் ராதா, அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா, அறிவழகன், மகாராஜன், பால குருசாமி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் சிவா, குரு ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










