» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாப சாவு : தூத்துக்குடி அருகே சோகம்!

புதன் 12, பிப்ரவரி 2025 10:17:01 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின்  குளியலறையில் இளம்பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சிவஞானபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் சீதாலட்சுமி (19). இவர் அங்குள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா ஜெயா காமராஜ் நகரில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் 

இந்நிலையில், நேற்று காலை ஜெயா வேலைக்கு சென்ற பின்னர், சீதாலட்சுமி தனது வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு தகரத்தினால் அடைக்கப்பட்டுள்ள பாத்ரூமில் குளிக்க சென்றாராம். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  மாலையில் அவரது தாயார் வீடு திரும்பியபோது மகள் குளியலறையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து சாயர்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி சூசைராஜ்  சம்பவ இடத்திற்கு சென்று சீதாலட்சுமி உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரது மரணத்திற்கான காரனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory