» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணம் ஆகாத விரக்தியில் லாரி டிரைவர் தற்கொலை

புதன் 12, பிப்ரவரி 2025 10:07:06 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள மேல மீனாட்சிபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சுபாஷ் (27), லாரி டிரைவர். இவரது பெற்றோர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்களாம். மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. 

திருமணமாகாததால் தனிமையில் வாழ்ந்த அவர் மன விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory