» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு : 2 பேர் கைது!

புதன் 12, பிப்ரவரி 2025 8:17:49 AM (IST)

கோவில்பட்டி அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வடக்குத் திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் வேலுச்சாமி (61). தொழிலாளியான இவா், சம்பவத்தன்று இலுப்பையூரணி மாடசாமி கோயில் அருகே நடந்து சென்றபோது 2பேரை அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மது குடிப்பதற்காக ரூ.300-ஐ பறித்துச் சென்றனராம். 

அப்பகுதியினா் சத்தம் போட்டதும் அந்த இருவரும் தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, வடக்கு புதுகிராமம் 2ஆம் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் கஜேந்திரன் என்ற கஜி (51), மூக்கரை விநாயகா் கோயில் தெரு, துரைராஜ் காம்பவுன்டு தா்மராஜ் மகன் துரைராஜ் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory