» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு : 2 பேர் கைது!
புதன் 12, பிப்ரவரி 2025 8:17:49 AM (IST)
கோவில்பட்டி அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வடக்குத் திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் வேலுச்சாமி (61). தொழிலாளியான இவா், சம்பவத்தன்று இலுப்பையூரணி மாடசாமி கோயில் அருகே நடந்து சென்றபோது 2பேரை அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மது குடிப்பதற்காக ரூ.300-ஐ பறித்துச் சென்றனராம்.
அப்பகுதியினா் சத்தம் போட்டதும் அந்த இருவரும் தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, வடக்கு புதுகிராமம் 2ஆம் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் கஜேந்திரன் என்ற கஜி (51), மூக்கரை விநாயகா் கோயில் தெரு, துரைராஜ் காம்பவுன்டு தா்மராஜ் மகன் துரைராஜ் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










