» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

பேக்குளத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் விலங்குடையான். விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் இரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் விவசாயத்தை கவனித்து வந்ததுடன் பால் வியாபாரமும் செய்து வந்தார். பேய்குளத்தில் இரு இடங்களில் வைக்கப்பட்ட பால் கடைகளில் அவருக்கு உதவியாக இரு மகள்களும் இருந்து வந்துள்ளனர். 

அதில் முதல் மகள் இந்திரா (24 )முனைஞ்சிப்பட்டி சாலையில் உள்ள பால் கடையை கவனித்து வந்துள்ளார். இன்று மாலை இந்திரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டைப்பூட்டி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து அவருடைய தந்தை விலங்குடையான் சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரி பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாககுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory