» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:14:20 AM (IST)

தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாலமுருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

தூத்துக்குடியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாலமுருகன் சன்னதியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

சுப்பிரமணிய சுவாமி  சன்னதியில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அரளி மாலையை காணிக்கையாக செலுத்தி விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று பாலமுருகன் சன்னதியிலும் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory