» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:22:28 PM (IST)
சாத்தான்குளத்தில் பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் ஜெய ரஞ்சனி. இவர் வழக்கு தொடர்பாக சென்றபோது பிரச்சனை காரணமாக இவரை சிலர் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து வழக்கறிஞர் ஜெயரஞ்சனி சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையிட்டார்.
அதன் பேரில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டியும், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் இன்று முதல் சங்கத் தலைவர் வில்லின் பெலிக்ஸ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் 21 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 81 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










