» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:22:28 PM (IST)

சாத்தான்குளத்தில் பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் ஜெய ரஞ்சனி. இவர் வழக்கு தொடர்பாக சென்றபோது பிரச்சனை காரணமாக இவரை சிலர் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து  வழக்கறிஞர் ஜெயரஞ்சனி சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையிட்டார்.

அதன் பேரில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டியும், தட்டார்மடம்  காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் இன்று முதல் சங்கத் தலைவர் வில்லின் பெலிக்ஸ் தலைமையில்  வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் 21 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 81 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory