» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிழாவுக்கு சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு : புளியம்பட்டியில் சோகம்!!

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:06:57 PM (IST)

புளியம்பட்டி அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி கோவில்பிள்ளை விளை தெருவைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் மதன் (27), இவர் தனது குடும்பத்துடன் புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். இன்று மதியம் ஓட்டுடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் மூழ்கியவர் பரிதாபமாக இறந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதன் உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory