» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
திங்கள் 10, பிப்ரவரி 2025 3:56:26 PM (IST)

தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 28வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் ஜி. பால்கனி வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஐ. ஜோசப் ஜான் கென்னடி அறிமுக உரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டக் கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) டி. சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு 'இயற்கையின் தாளம்' என்ற கருப்பொருளை மாணவர்கள் பாடல்கள், நடனம் மற்றும் குறும்படங்களுடன் வெகு சிறப்பாக நிகழ்த்தினர். மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வண்ணமயமான நிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. விழாவில் தலைமையாசிரியை பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் ஜேன் மேத்யூ நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










