» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

திங்கள் 10, பிப்ரவரி 2025 3:56:26 PM (IST)



தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 28வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் ஜி. பால்கனி வரவேற்று பேசினார்.  பள்ளியின் தாளாளர் டாக்டர் ஐ. ஜோசப் ஜான் கென்னடி அறிமுக உரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டக் கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்)  டி. சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். 

இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு 'இயற்கையின் தாளம்' என்ற கருப்பொருளை மாணவர்கள் பாடல்கள், நடனம் மற்றும் குறும்படங்களுடன் வெகு சிறப்பாக நிகழ்த்தினர். மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வண்ணமயமான நிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. விழாவில் தலைமையாசிரியை பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் ஜேன் மேத்யூ நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory