» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 10, பிப்ரவரி 2025 12:51:03 PM (IST)

தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதிய விபத்தில் ஜவுளிக் கடை பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி புஷ்பராணி (43). இந்த தம்பதிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்ராஜ் இறந்து விட்டார். புஷ்பராணி தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக முள்ளக்காடு பேருந்து நிறுத்ததிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது, தெற்கிலிருந்து மேற்காக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த புஷ்பராணி, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

கந்தசாமிFeb 10, 2025 - 01:37:56 PM | Posted IP 172.7*****

சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory