» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அய்யனடைப்பு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் மறியல்!
திங்கள் 10, பிப்ரவரி 2025 12:35:52 PM (IST)

அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக பாதிக்கப்படும். இந்த பஞ்சாயத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிப்பதால் வீட்டுவரி, தண்ணீர் கட்டணம், மற்றும் இதர வரிகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே மக்கள் நலன் கருதி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாதால் மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான மக்களை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










