» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு ஊழியர்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

திங்கள் 10, பிப்ரவரி 2025 11:45:29 AM (IST)



தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாடு அறைகூவல் தீர்மானத்தின் படியும் 5 கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு முடிவின் அடிப்படையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணிநேர தர்ணா போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தொடங்கியது. 

மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு ஆ.மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ந.வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் உமாதேவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியூ மாநில செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார்.  TNGPA மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் அ.சாம்டேனியல்ராஜ், மாநில செயலாளர் லில்லி புஷ்பம்,  TNPTF மாவட்டச் செயலாளர் மா.கலைஉடையார் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory