» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு ஊழியர்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:45:29 AM (IST)

தமிழக முதல்வரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாடு அறைகூவல் தீர்மானத்தின் படியும் 5 கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு முடிவின் அடிப்படையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணிநேர தர்ணா போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை தொடங்கியது.
மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு ஆ.மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ந.வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் உமாதேவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியூ மாநில செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார். TNGPA மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் அ.சாம்டேனியல்ராஜ், மாநில செயலாளர் லில்லி புஷ்பம், TNPTF மாவட்டச் செயலாளர் மா.கலைஉடையார் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










