» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை
திங்கள் 10, பிப்ரவரி 2025 10:27:21 AM (IST)
தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர், கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் மனைவி கனி (38). இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கனிக்கு 2018 ஆம் ஆண்டு வயிற்றில் புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வயிறு வலிப்பதாக கூறி சாப்பிடாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் வீட்டின் கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவன் மற்றும் பிள்ளைகள் வந்து பார்த்த பொழுது எரிந்த நிலையில் விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










