» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் : விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:28:59 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.  270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270விசைப்படகுகளில் தினமும் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மாற்று தொழில் முறையை அனுமதிக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 270 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory