» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் : விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:28:59 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். 270 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270விசைப்படகுகளில் தினமும் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மாற்று தொழில் முறையை அனுமதிக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 270 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










